ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

கருமியின் பணப் பெட்டி

ஆசைப் படுவதை அடைவதற்கான
போராட்டம்தான் மனித சரித்திரம் .

மனிதப் படகுக்கு ஆசைகளே துடுப்புகளாக
ஏறுகின்றன.

ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு ஆசை.

ஒருவன் பெண்ணை விரும்புகிறான். ஒருவன்
மண்ணை விரும்புகிறான்

ஒருவன் பதவியை விரும்புகிறான். ஒருவன்
ஒருவன்பணத்தை விரும்புகிறான்.

ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு
விதமான ஆசை

குழந்தைப் பருவத்தில் பொம்மைகளை
விரும்புகிறான்.

வயதான பிறகு உயிருடைய பொம்மைகளை
விரும்புகிறான்.

எப்படியோ மனிதனுக்கு ஒவ்வொரு
பருவத்திலும் விளையாடுவதற்கு ஏதாவது
வேண்டும்,

ஆசையில்லாத மனிதனே இல்லை,

ஆசைகளைத் துறக்க வேணடும்
என்பவனும் மோட்சத்தை விரும்ப௸கிறான்

ஆனால் மனிதன் கேட்பதெல்லாம்
அவனுக்கு கிடைத்துவிவதில்லை.

ஏன் கிடைப்பதில்லை,

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம்
சொல்லுகிறார்கள்
‘ந௸ விரும்பினால் போதாகது, இறைவனும்
விரும்ப வேண்டும்’ என்கின்றனர் சிலர்
‘விதியில் இருந்தால்தான் கிடைக்கும்’
என்கின்றனர் சிலர்,

‘ஆசைப்படுவதைஅடைவதற்கு வேண்டிய
முயற்சியை நி செய்யவில்லை’ என்கின்றனர்
சிலர்

‘உன்ஆசை உன் சக்திக்கு மிறியது,
அதனால்தான் கிடைக்கவில்லை’ என்கின்றனர்
சிலர்

மனிதன் கேட்பதற்குக் கவிஞர் ஃகததில் ஷஃபாயி
ஒரு சஶவையான காரணம் கூறுகிறார்

இந்த வாழ்க்கையிடமிருந்து
உனக்கு எதுவ௸ம் கிடைக்கப் போவதில்லை
இது ஒரு கருமியின்
பணப் பெட்டி,

நன்றி

அப்துல் ரகுமான்

பாக்யா