ஞாயிறு, 10 நவம்பர், 2013

பூச்செடி



தன் மகள் லாவண்யா பற்றி கவிஞர் பழநிபாரதியின் கவிதை




பூச்செடி வளர்க்க முடியாத
எங்கள் சிறிய வீட்டில்
வளர்ந்து கொண்டிருக்கீறாள்
லாவண்யா,

இவள் சிரிப்பை
முழம்போட்டு
முடிந்துபோவாள்
எங்கள் வீட்டுப் பூக்காரம்மாள்,

இவள் மழலையில்
கனிந்து நிற்பாள்
பழக்காரம்மாள்,

எங்களோடு
நண்கர்களோடு
எதிர்வீட்டுத்
தென்னை அணில்களோடு
ஐன்னல் குருவியோடு
மதியம்
இரண்டு மணி காக்கைகளோடு
பழகிப் பழகிப்
பூக்கிறது
எங்கள் பூச்செடி

இந்த செடியை வளர்ப்பது
சுலபமாக இருக்கிறது,

பூக்களைப்
பத்திரப்படுத்துவதுதான்
எப்படியென்று
தெரியவில்லை.

நன்றி     பழநிபாரதியின்