ஞாயிறு, 13 ஜூலை, 2014

பொய்யோ ? மெய்யோ ? பாரதியாா்

பொய்யோ ? மெய்யோ ?  --- மகாகவி பாரதியாா்




எல்லா சாஸ்திரங்களும் ஏற்க்குறைய உண்மைதான் ஆனால், எல்லாருக்கும், எப்போதும், ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. சின்ன திருஷ்டாந்தம் சொல்லுகிறேன்

ஒரு செல்வா், கிழவனாா் ஒருவேளை ஆஹாரம் செய்துகொண்டு, லெளகிக விஷயங்களைத் தான் கவனியாமல், பிள்ளைகள் கையிலே கொடுத்துவிட்டு, நியம வஷ்டைகள் ஜப தபங்களுடன் சுந்தர காண்டத்தையும் கடோபநிஷத்தையும், பாராயணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறாம விருப்பதே மேலான வழியென்ற கொள்கை இந்தக் கழவனாருக்குச் சாிப்பட்டு வரும்.

ஒரு 16 வயது ஏழைப்பிள்ளை, தகப்பனில்லை, வீட்டிலே தாயாருக்கும் தங்கைக்கும் தன்ககுமாக எங்கேனைம் போய் நாலுபணம் கொண்டுவந்தால் தான் அன்றன்று அடுப்பு முட்டலாம். இவன் மேற்படி சுந்தரகான்டவழியை போய்ப் பிடித்தால் நியாயமாகுமா ?

‘இந்த உலகமே பொய்’ என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கிவருகிறது. ஸந்யாஸிகள் இதை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி, இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்தி லிருப்போருக்கு அந்த வாா்த்தை பொருந்துமா? நடுவீடடில் உச்சாிக்கலாமா? அவச்சொல்லன்றே? நமக்குத் கந்தை வைத்து விட்டுப்போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலைபோலே நிற்கிறாள் மனைவி. நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீா்விட்டுக் கரைந்தாள் நமது மகிழ்ச்சியின்போதெல்லாம் உடல் பூாித்தாள் நமது மகிழ்ச்சியின்போதெல்லாம் உடல் பூாித்தாள் நமது குழந்தைகளை வளா்த்தாள் அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானை? பெற்றவாிடம்  கேட்கிறேன். குழந்தைகள் பொய்யா? நமது விட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?

வீடுகட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன்படாது. நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும். இவற்றைத் தரும்படி தத்தம் குலதெய்வங்களை மன்றாடிக் கேட்கவேண்டும், எல்லா தெய்வங்களும் ஒன்று, அறம், பொருள், இன்பம் என்ற முன்றிலும் தெய்வஒளி காணவேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும்.

உலகத்தை நோக்கி வினவுதல்

1. நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நங்களெல்லாம்
  சொற்பனநாதானா? --  பலதொற்ற மயக்கங்களோ?
  கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
  அற்ப மாயைகளோ? --  உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?

2. வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
  கானலினீரோ ? -- வெறுங் காட்சிப் பிழைதானோ ?
  போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிநதே போனதனால்
  நானுமோா் கனவோ ? --  இந்த ஞாலமும் பொய்தானோ ?

3. காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றெ பலநினைவும்
  கோலமும் பொய்களோ ? -- அங்குக் குணங்களும் பொய்களோ ? சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோா்  விதையிலென்றால்
  சோலை பொய்யாமோ ? -- இதைச் சொல்லொடு சோ்ப்பாரோ ?

4. காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
  வீண்படு பொய்யிலே -- நித்தம் விதிதொடா்ந் தடுமோ ?
  காண்பதுவே யுறுதிகண்டோம், காண்பதல்லா லுறுதியில்லை
  காண்பது சக்தியாம் -- இந்தக் காட்சி நித்தியமாம்.

(பின்னுரை  -- முதற் பாட்டிலே, ‘நிற்பது’, ‘நடப்பது’, முதலியன உலகத்தில் தோன்றும் வடிவங்கள் ‘கற்பது’, ‘கேட்பது’ முதலியன செய்கைகள். முன்றாம் பாட்டிலே ‘கோலமும் பொய்களோ, அங்குக் குணங்களும் பொய்களோ’  என்பது, தெளிவாகச் சொன்னால், ‘தேளின் உருவம் மாத்திரம் பொய்யோ ? அது கொட்டுவதும் பொய்தானோ ? என்ற கேள்வி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக