ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

சினேகிதனின் தாழ்வான வீடு


சினேகிதனின் தாழ்வான வீடு

கறுப்பேறிப்போன
உத்திரம்,
வீட்டின் வளர்ந்தபிள்ளைகளுக்கு
கையெட்டும் உயரத்தில்.


காலேஐ் படிக்கும் அண்ணன்
அதில் அவ்வப்போது
திருக்குறல்,
பொன்மொழிகள்-
சினிமாப் பாட்டின்
நல்லவரிகள் - என

எழுதியெழுதி அழிப்பான்
எழிதுவான்.


படிப்பை நிறுத்திவிட்டு
பழையபேட்டை மில்லில்
வேலை பார்க்கும் அண்ணன்
பாஸிங்ஷோ சிகரெட்டும்
தலைகொடுத்தான் தம்பி
விள்ம்பரம் ஒட்டிய
வெட்டும்புலீ தீப்பெட்டியும்
உத்தீரத்தின்
கடைசி இடைவெளியில்
(ஒளித்து) வைத்திருப்பான்.


அப்பா வெறுமனே
பத்திப்படுத்தி வந்த
தாத்தாவின் - பல
தலபுராணங்கள்
சிவஞான போதம்
கைவல்ய நவநீதம்
சைவக்குரவா் சரித்திரங்கள்
பலவற்றை,
வெள்ளையடிக்கச் சொன்ன
எரிச்சலில் - பெரிய அண்ணன்
வீசி எறியப் போனான்.
கெஞ்சி வாங்கி
விள்க்கு மாடத்தில் அடைத்துபோக
உத்திர இடைவெளிகளில்
ஒன்றில் தவிர
அனைத்திலும்
அடைத்து வைத்திருப்பாள்
அவன் அம்மா.


முதல்பிள்ளையை
பெற்றெடுத்துப் பேனபின்
வரவே வராத அக்கா
வந்தால் -
தொட்டில் கட்ட
தோதுவாய் - அதை
விட்டு வைத்திருப்பதாயும்
கூறுவாள்.


……………..


நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று
சம்மணமிட்டு
காலைக் கயிற்றால் பிணைத்து
இதில்
துாக்கு மாட்டித்தான
செத்துப் போனார்
சினேகிதனின்
அப்பா.


நன்றி
கலாப்ரியா

1 கருத்து: