ஞாயிறு, 8 ஜூன், 2014

சத்திரத்தின் முகவரி


மரணத்தைக் கண்டு எல்லோரும்
அஞ்சுகிறாா்கள்.

மரணம் பற்றித் தொிந்திருந்தால்
இப்படி அஞ்சமாட்டாா்கள்.

அறியாமையே அச்சத்தின் ஆதாரம்.

செத்தால்தான் சுடுகாடு தொியும்
என்பாா்கள் இது தவறான கருத்து,

செத்தவன் எதையும் தொிந்துகொள்ள
முடியாது.

எதையும் தொிந்துகொள்வதற்கான
அறிவோ உணா்வோ அவனிடம் இருக்காது.

வாழ்பவன்தான் சுடுகாட்டைத் தொிந்து
கொள்ள முடியும்.

சாவைப் பற்றியும் செத்தவன் தொிந்து
கொள்ள முடியாது.

உயிரோடிருப்பவன்தான் சாவைப் பற்றி
அறிய முடியும்.

மரணம் என்றால் என்ன என்பதை
வாழ்க்கையிலிருந்துதான் தொிந்துகொள்ள
முடியும்.

அதாவது வாழ்ககையை அறிந்தவன் தான
மரணத்தையும் அறிவான்.
மரணம் என்றால் என்னவென்று புாியவிலை
என்று ஒருவன் சொல்கிறான்
என்றால் அவனுக்கு வாழ்க்கையும்
புாியவில்லை என்று பொருள்.

வாழ்வாங்கு வாழ்கின்றவனே
வாழ்க்கையை அறிவான். அவனுக்கே
மரணம் இன்னதெனத் தொியும்.

மரணத்தை அறிந்தவன் மரணத்திற்கு
அஞ்ச மாட்டான்.

வாழ்த் தொியாமல் வாழ்கிறவா்களே
மரணத்தைக் கண்டு அஞ்சுகிறாா்கள்,

அறிந்ததில் அச்சம் உண்டாகாது.
உயிா் ஒரு பயணி.

அதன் பயண வழியில் வாழ்க்கையும்
ஒரு கத்திரம், மரணமும் ஒரு சத்திரம்.

கவிஞா் தாஃ சொல்கிறாா்.

மரணததைப் பற்றிய உண்மையை
வாழ்கிறவா்களிடம் கேள்
பயணிக்கு ஒரு சத்திரத்தின் முகவாி
மற்றொரு சத்திரத்தில் கிடைக்கிறது

=நன்றி

அப்துல் ரகுமான்