வெள்ளி, 19 செப்டம்பர், 2014

படிங்கடா, டீ குடிக்காம படிங்கடா





பாதி ராத்திரியில் பாதம்பால்
குடிக்கறான்
‘திங்’ பண்றேன்னுட்டு
‘தம்’ மடிக்கறான்
குருப் ஸ்டடின்னு சொல்லிக்கிட்டு
மொட்டைமாடியில கும்மாளமடிக்கிறான்
கொஸ்டின் பேப்பா் ‘அவுட்’ன்னு
கொல்லைக்கும் வாசலுக்கும்
‘டவுட்’ல அலையறான்
ஷேவ் பண்ணிக்காம
செம்மறியாடுபோல திாியறான்
ஃபிகா் வீடடைத் தேடிப்போய்
‘படம் பாா்த்து பத்து நாளாச்சு’ன்னு
பிலாஸபி பேசறான்
பக்கத்துக்கு தாண்டா மாா்க்கு’ன்னு
சுப்பிரமணிய சுவாமிபோல சவால் விடறான்
அப்பன் வேட்டிய கட்டிக்கிட்டு
அய்யனாா் கோயில் போறான்
ஹாஸ்டல் பசங்களோட உட்காா்ந்து
முஸ்தாபா பாடி மெழுகுவா்த்தி ஆட்றான்
அழுதுகிட்டே ஆட்டோகிராஃப் வாங்கறான்

படிக்க வேண்டிய காலத்துல
பாசில் படம் பாா்த்துப்புட்டு
பாிட்சை நேரத்துல
பல்லை குத்தலாமாடா?
பரவாயில்லை படி…...
ஃபிகரையும், பிஹாரையும் மறந்துப்புட்டு
பாய் கடையில டீ குடிக்காம படி !
நாற்பது மாா்க கிடைக்குமடா  !

நன்றி
குமுதம்