சனி, 7 பிப்ரவரி, 2015

காதலித்துப்பாா்



உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அா்த்தப்படும்

ராத்திாியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்

காதலித்துப் பாா்



#

தலையணை நனைப்பாய்

மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்
வருஷங்கள் நமிஷமென்பாய்

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால் - இநத உலகமே
உன்னைேய கவனிப்பதாய்
உணா்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்தப் பூக்கள்
எல்லாம்
காதலை கெளரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்

காதலித்துப்பாா்

#

இருதயம் அடிக்கடி
இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவாிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழக்கும்

ஹாா்மோன்கள்
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்

பிறகு
கண்ணீா்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பாா்

#

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா ?

அகிம்சையின் இம்சையை
அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்
அறிந்ததுண்டா ?

உன்னையே உனக்குள்ளே
புதைக்க்த் தொியுமா ?

சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா ?

அத்வைதம்
அடைய வேண்டுமா ?

ஐந்தங்குல இடைவெளியில்
அமிா்தம் இருந்தும்
பட்டினி கிடந்து
பழகியதுண்டா ?

காதலித்துப் பாா்

#

சின்னச்சின்னப் பாிசுகளில்
சிலிா்க்க முடியுமே

அதற்காாவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அா்த்தங்கள் விளங்குமே

அதந்காகவேனும்

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே

அதற்காக வேனும்

காலித்துப்பாா்

#

சம்பிரதாயம்
சட்டை பிடித்தாலும்

உறவுகள்
உயிா்பிழிந்தாலும்

விழித்துப் பாா்க்கையில்
உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில்
அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப் பாா்

சொா்க்கம் - நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துப் பாா்

நன்றி
கவிப்பேரரசு வைரமுத்து