ஞாயிறு, 20 அக்டோபர், 2013

காயாத்ரி மந்திரம்



காயத்ரி பற்றி
கவிதை எழுதலாம்
எனில்
கவிதை வேறு
கவிதை வேறா

காயத்ரிகள்
அழகாய்த்தான் இருக்கிறார்கள்
அழகாய் இருப்பவரெல்லாம்
காயத்ரிகளாய் இருந்திருக்கக்
கூடாதா

கால் கொலுசு
கண்ணாடி வளையல்
மல்லிகைப் பூ
மஞ்சள் தாவணி
இவை எவையும் இல்லாமல்
அழகாய் இருக்க
காயத்ரிக்கே சாத்யம்

பெரும்பாலும்
காயத்ரிகள்
காதலுக்கெட்டாத துரத்தில்
சிரிக்கிறார்கள்
எல்லாம் தெரிந்த
காயத்ரிகலளுக்கு
கொஞ்சம்
வெட்கப்பவும் தெரிந்திருக்கலாம்

காயத்ரிக்கும்
காயத்ரிக்கும் நடக்கிற போட்டியில்
காயத்ரிகளே ஜெயிக்கிறார்கள்

காயத்ரியைப் பிடிக்கும் என்பதற்கு
கண்ணம்மாவை
பிடிக்காகது என்பதல்ல பொருள்

காயத்ரிகள் காயத்ரிகள்தான்
கல்யாணத்துக்கு
முன்னும் பின்னும்

காயத்ரிக்குத்தான் தெரியும்

காயத்ரியாய் இருப்பதன் கஷ்டம்.        


நன்றி   கவிதா பாரதி