தோழா .....
எப்படி
உன்னால்
சொல்ல முடிந்தது
என்னிடம் ?
கல்லூரிப் பாடத்திலிருந்து
காண்டம் ஜோக்
வரையிலும்
பகிர்ந்து கொண்டவன் நீ
நம்
பரஸ்பர ரசணை பற்றி
பட்டியலிட பக்கங்கள் போதாது
கல்லுரி வாசல் வ்ராவதியில்
கால நேரமற்று
பேசிக் கொண்டிருந்து
பதறிப் பிரிந்த போதும் ...
கடற்கரையில்
வீரல் கோர்த்து
ஆலையில் நணைந்தபோது...
வேடிகையாய்
என் கன்னத்தில் நீ
வேகமற்றுத் தட்டிய போதும் ...
புறங்கையில்
பூப்போல
நீ இட்ட முத்தத்தின்
போதும் கூட
நான் நீணைத்ததில்லை
இப்படி
சொல்லப்போகிறாய்
என்று !
நிறைய
தோழிகளின் காதலுக்கு
பாலமாய் இருந்திருக்கிறேன்
என்பது உண்மைதான் ....
ஆனாலும் ...
நீயும் கூட
உன் காதலைச்
சுமந்து சென்று
மற்றவரிடம் சேர்ப்பிக்குமாறு,
எப்படி சொல்ல முடிந்தது ??
என்னிடம் ??
எப்போதும்...
தூதுப் பெண்களுக்கு
ஏனோ
அமைவதில்லை
காதல் !!!!!!!!!!!!
நன்றி
உமா சம்பத் (குமுதம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக