ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஐக்கூ

இருக்கலாம் 
பலருக்கு 
இசையென்பது 
பிணததோல்களின் இரைச்சலாய்..  
ஆனால் 
எனக்கோ 
குருவிகளின் 
சிறிய தொண்டைகளிருந்து

2)   சொல்லிக் கொள்கிற மாதிரி 
அழகானதாயில்லை 
சந்தன மரங்கள் 

3)  திறந்த வாயீற்படியில்  
ஒரு முகம் தோன்றி 
ஏதேனும் உரைக்கட்டும்   
கவலையில்லை ....
பார்க்கும்போது 
பூட்டில்லாமலிருத்தல் வேண்டும்  

4)  சறுக்குப் பாறையில்
டிரவுசர் கிழிய 
புட்டம் தேய்த்து விளையாடுகிற 
குழந்தை அறியுமோ  
அப்பாவின் வறுமையை 

5)  அவளை அணைக்க முடியவில்லை 
மனசுக்குள் நளிகின்றன...
புடவையாய் இறந்த பட்டுப்புழுக்கள் 

6)  யாரேனும் 
பகிர்ந்துகொள்ள   முடியுமா 
மரணத்தை?

நன்றி -- இ ரா . இலட்சுமணன்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக